முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

வேலுக்கு அடுத்து சிலுவை அனுப்பு

தவெகவின் கிறிஸ்தவ சார்பு அரசியல் போலியான மிகைப்படுத்த்தப்பட்ட ஒன்று. அது ஒரு காட்சி அரசியல் மட்டுமே. சிறுபான்மை மக்களுக்கு எந்தப் பிரச்சினை வந்தாலும் தவெக அரசு கூட நிற்காது. ஏனென்றால் அது அவர்களுடைய கொள்கையே அல்ல. விவிலியத்தைக் கையில் சுமக்காத, ஜோசப், ஜேம்ஸ் என்றல்லாம் பெயர் வைத்துக் கொள்ளாதவர்களே உண்மையில் அம்மக்களுக்காக பாராளுமன்றத்தில் சண்டை போடுகிறார்கள். இந்த சிறுபான்மை பிம்பம் தமிழ்நாட்டு அரசியலில் மதத்தை ஒரு முக்கிய அலகாக்குவதற்காக பாஜகவால் மறைமுகமாகக் கொண்டு வரப்படுவது எனக் கூறப்படுவது உண்மைதான் - ஏனெனில் பல நேர்முகங்களில் இந்துத்துவர்களே இதை ஆதரிக்கிறார்கள். மதச்சின்னங்களை சட்டப்பேரவையில் பயன்படுத்துவது அவரவர் உரிமை என்கிறார்கள். இது ஒரு வெறுப்பரசியலை ஏற்படுத்தினால் அதைப் பின்னர் தம்மால் அறுவடை பண்ண முடியும் என நினைக்கிறார்கள். ஏனெனில் இதே கூட்டத்தினர்தாம் இன்னொரு பக்கம் கிறிஸ்தவ லாபி அரசியல் என்று விமர்சிக்கவும் செய்கிறார்கள். அடுத்து விஜய்யே செய்யும்போது நாங்கள் ஏன் இந்து மதத்தைத் தூக்கிப் பிடிக்கக் கூடாது எனக் கேட்பார்கள். முதலில் இப்படித்தான் முருகன், வேல் என்று எதையோ தூக்...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...

சினிமாவும் சர்வாதிகாரமும்: யோசா சொல்வதென்ன?

  காட்சி ஊடகம் நமக்குப் பொழுதுபோக்க உதவுகிறது என்றாலும் அது அடிப்படையில் மனிதரைச் சிந்திக்க விடாமல் செய்து செயலூக்கத்தை ஒழிக்கிறது, இது சர்வாதிகாரத்தை நோக்கி இட்டுச் செல்கிறது என்று சில மாதங்களுக்கு முன் நான் விஜய்யின் வருகையை ஒட்டி ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். இன்று தற்செயலாக மரியோ பார்கஸ் யோசாவின் ஒரு கட்டுரையைப் படித்தால் அதில் அவர் கிட்டத்தட்ட அதே கருத்தைத்தான் சொல்கிறார். காட்சி ஊடகங்களின் ஆதிக்கம் உள்ள சமூகம் சர்வாதிகாரத்துக்கு எதிராகச் செயல்பட முடியாமல் முடங்கும் என்கிறார்: (...) making the present unreal, turning actual history into fiction has the effect of demobilising the citizen, making him or her feel exempt from any civic responsibility, encouraging the conviction that it is beyond anyone's reach to intervene in a history whose screenplay is already written. Along this path we may well slide into a world where there are no citizens, only spectators, a world where, although formal democracy may be preserved, we will be resigned to the kind of lethargy dictatorships asp...

ஜென் ஸீ கிளர்ச்சிகளின் ஆபத்துகள்

  இம்மாத உயிர்மையில் என் கட்டுரை!

"ரசிகன்" இன்றைய நிலையில்

  நான் "ரசிகன்" என்றொரு நாவல் எழுதினேன். அதில் நாயகன் ஒரு தீவிர கம்யூனிஸ்ட், தீவிர எழுத்தாளன், சிறுபத்திரிகையாளன். அவன் இறுதியில் ரஜினி ரசிகனாகி இலக்கியத்தில் இருந்தும் அரசியலில் இருந்தும் விலகி விடுவான். லும்பன் கலாச்சாரத்தில் கலப்பான். அப்போது அது ஒரு குறியீடாகத்தான் கண்டேன். ஆனால் இப்போது என் கண்முன்னே அதன் சாயல்களைப் பார்க்கிறேன். இதில் சில சிக்கல்கள் எழுகின்றன: ஏற்கனவே தவெகவின் எழுச்சிக்குப் பின் சில தீவிர படைப்பாளிகள் விஜய் ரசிகர்களாகி ஆதரிக்கிறார்கள். தனுஷ் கட்சி ஆரம்பித்து அடுத்த தேர்தலில் நிற்பது உறுதியாகிவிட்டது. இனி சில எழுத்தாளர்கள் தனுஷ் ஆதரவாளர்கள் ஆவார்கள். அவர்கள் இடையே மோதல் ஏற்படும். அதன் பிறகு வேறு சில நடிகர்களும் களத்துக்கு வருவார்கள். த்ரிஷா அரசியலுக்கு வந்தால் இதைவிட பெரிய ஆதரவுப் படை அவருக்கு எழுத்தாளர்கள் மத்தியில் இருந்து தோன்றுவார்கள். நடிகையர் வரவு த்ரிஷாவுடன் நிற்கும் என்றும் சொல்ல இயலாது. ஏனென்றால் பெண்களின் பங்களிப்பு அரசியலில் அதிகரித்துக் கொண்டே போகிறது. தமிழ் நவீன இலக்கியம் எதையெல்லாம் பார்க்க வேண்டி இருக்கிறது? எனக்குத் தெரிந்து வேறு மொழிகளி...

நாம் ஏன் இப்படி இருந்து கொண்டிருக்கிறோம் என்று யாருக்கும் தெரியாது

  அதிகாரச் சமநிலை இல்லாத சமூகத்தில் எந்த நல்ல விசயமும் நிகழ்கையில் ஏற்கனவே ஒரு ஏற்றத்தாழ்வை, சுரண்டலை உருவாக்கும். தமிழ்ப் பண்பாடும் நவீன இலக்கியமும் இதற்குச் சிறந்த உதாரணங்கள்: முப்பதாண்டுகளுக்கு முன்பு வரைக்கும் வெகுமக்கள் வாசிப்பு, ஊடகம், பதிப்பு ஆகியவற்றில் இருந்தும் அரசாங்க ஆதரவு, நிதியில் இருந்து விலகி இருந்தோம். அதாவது வாய்ப்புகள் இல்லை என்பதால். இது ஒரு பெரும் ஆற்றலை அளித்தது - புதிய போக்குகளை விலகி நின்று வாசிக்க, விவாதிக்க, உருவாக்க இயன்றது. அரசில் இருந்து சினிமா, வெகுமக்கள் கலை வடிவங்கள், கருத்துருவாக்கங்கள் அனைத்தையும் குறித்த மாற்றுப் பார்வைகள் தோன்றின. இந்த விலகல் மறைந்து வெகுமக்கள் போக்குகளுடன், நிறுவனங்களுடன், அரசுடன் நாம் கைகோர்க்கும் நிலை ஏற்பட்டது. தொழில்நுட்பம் இதற்கான வெளியை உருவாக்கியது. இதனால் புத்தகப் பதிப்பு வலுவானது. பத்து புத்தகங்கள் வந்த இடத்தில் ஐநூறு புத்தகங்கள் வந்தன. ஆனால் வெகுமக்கள் பார்வையுடன் ஒத்திசைய வேண்டிய கட்டாயம் நவீன இலக்கியவாதிகளை பெரும் அமைதி கொள்ள வைத்தது. எதிர்மை இல்லாததால் புதுச் சிந்தனைகள், போக்குகள், எதிர்த்தரப்புகள் மறைந்தன. ஒன்றிப் ...