முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

விஜய் உருவாக்கி உள்ள சுதந்திரம்

  தவெகவில் அதிமுக எம்.எல்.ஏக்கள் சேர்வது ஒரு செய்தி அல்ல. அரசியல்வாதிகளுக்குத் தேவை அதிகாரம். அதிகாரத்தை நோக்கி அவர்கள் குவிவார்கள். 'தவெக' என்பது பெயர் மட்டும்தான். அந்த இடத்தில் பாஜக இருந்து ஆட்சிக்கு வந்திருந்தாலும் இதுதான் நடந்திருக்கும் - கம்யூனிஸ்டுகள் கூட 'தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தக்க வைக்கவும், தமிழ்நாட்டு பாஜக ஒன்றிய அரசிலுள்ள பாஜகவைப் போலல்லாது சமூகநீதியையும் மதசார்பின்மையையும் காப்பாற்றுவதாக உள்ளதாக இருப்பதால்' என்று சொல்லிச் சேர்ந்திருப் பார்கள். பாஜக என்ன குரங்குக் கூட்டம் ஒன்று கட்சி ஆரம்பித்து கூடத்தான் அதிலும் பல கட்சியில் இருந்து மக்கள் சேர்ந்து அதிகாரத்தைக் கோருவார்கள். இது பிற கட்சிகளின் பலவீனத்தைக் காட்டவில்லை. அதிகாரத்தின் ருசியை மட்டுமே காட்டுகிறது. இது செய்தியல்ல, தவெகவின் வசீகரத்தையும் இது காட்டவில்லை. தவெக இப்போதைய சூழலைக் கருதி இவர்களை வரவேற்கிறது. எந்தக் கட்டுப்பாடோ நிபந்தனையோ இல்லாமல் வரவேற்கிறது. ஒருவேளை, தனிப்பெரும்பான்மை தவெகவுக்கு கிடைத்திருந்தால் அங்கு போவது இவ்வளவு வளமான வாய்ப்பாக இருந்திருக்காது. தவெக என ஒன்று இல்லாதிருந்தால் இப்போத...

இந்திய டி20 அணியின் உண்மையான சவால்

  அயர்லாந்துடன் இந்தியா தோற்றதில் பெரிய துயரம் இல்லை. கடந்த முறை இந்தியா அங்கு டி20 ஆடியபோதும் அயர்லாந்தினர் நன்றாகவே ஆடினார்கள். இம்முறை ஆட்டச்சூழலும் மைதான அமைப்பும் மட்டையாட்டத்துக்குச் சாதகமாக இல்லாதது அவர்களுடைய ஆட்டபாணிக்குப் பொருத்தமாக இருந்தது. பெரிய சவால்கள் இன்றியே வென்றார்கள். இரண்டு ஆட்டங்களிலும் எந்த நிலையிலும் இந்தியா அவர்களை நெருக்கித் தள்ளவில்லை. இதெல்லாம் பலரும் விவாதிப்பதுதான். இங்கிலாந்துடனான அடுத்து வரும் தொடரில் இதே அணி மேலும் நன்றாக ஆடுவார்கள், ஏனென்றால் அப்போது ஆடுதளம் இன்னும் சாதகமாக இருக்கும் என்று கூறுகிறார்கள். இங்கிலாந்து மட்டையாட்டக்கார்கள் இன்னும் ஆவேசமாக மட்டையாடுவார்கள், அவர்களுடைய பந்து வீச்சாளர்கள் நிறைய ரன்களை நமக்குக் கொடுப்பார்கள் என்பதால் ரன்களைக் கட்டுப்படுத்தும் கவலையே நம் அணிக்கு இருக்கும். விக்கெட் கொடுக்காமல் ஆடுவது அல்ல. மேலும் தட்டையான ஆடுதளங்களிலேயே பந்து வீச்சாளர்களுக்கு கூடுதல் திறன்கள் தேவையுள்ளது - துல்லியமான யார்க்கர்கள், நல்ல பவுன்சர்கள், மெதுப்பந்துகள், அகலமான திசை என நிறைய சவால்கள். அயர்லாந்தில் குறிப்பிட்ட நீளத்தில் வீசிக்கொண்ட...

நீட்டிக்கப்பட்ட காலம்

  சு.ராவின் நினைவோடை நூல்களை இணையத்தில் பார்த்துக் கொண்டிருந்தேன். சட்டென சம்மந்தமே இல்லாமல் அரவிந்தன் நினைவுக்கு வருகிறார். நினைத்தால் அழைக்க முடியாதில்லையா என்று தோன்றுகிறது, கத்தியை மாரில் சொருகுவதைப் போன்றொரு வலியை மனதில் உணர்கிறேன். அவர் சு.ராவை எந்தளவுக்கு ஊன்றிப் படித்தவர் என்பதை அவருடனான உரையாடல்களில் காண முடியும். சு.ராவின் இலக்கிய விழுமியங்களைக் கடைசி வரை தன்னுடன் வைத்திருந்தார். சு.ராவின் நீட்டிக்கப்பட்ட காலத்தைப் போல அவர் இருந்தார். இது சரியா இல்லையா என்பது வேறு விசயம். ஆனால் இப்போது அரவிந்தனை நினைக்காமல் சு.ராவைப் படிக்க இயலவில்லை

பாதி திறந்த கையை அசைத்தசைத்துப் பேசுபவர்கள்

நான் படிக்கத் தொடங்கிய காலத்தில் சு.ராவின் மொழிநடை மீது பலரையும்போல எனக்கும் பெரும் மயக்கம் இருந்தது. பரந்து பட்டு நான் வாசிக்கத் தொடங்கியபோது சு.ராவைப் போன்ற பிற நடையாளர்களையும் கண்டேன். கருத்தாக்கம், கருத்தியல், தத்துவம், கோட்பாடு என என் வாசிப்பின் நாவு நீண்டு நீண்டு புதிய ருசிகளைக் கண்டது. ரெண்டாயிரத்தில் எனக்கு ஒரு புதிய எண்ணம் உண்டானது - இலக்கிய நடையில் உருவகங்கள் அதிகமாக வருவதால் கருத்துக்களைத் தெளிவாக, கூர்மையாகச் சொல்ல முடிவதில்லை, எதையும் நேராக தெளிவாகச் சொல்ல வேண்டும், அப்பட்டமாக எழுத வேண்டும், 'சொல்லலாம்', 'கூறப்படுகிறது' 'நினைக்கலாம்' எனும் கமறல்கள், நழுவல்கள் தேவையில்லை என்று நினைத்தேன். அதன் பிறகு விமர்சன வாசிப்பும் தத்துவமும் என் பிரக்ஞையில் அதிக இடம் பிடித்த காலம் வந்தது. எதையும் நேரடியாகச் சொல்லி அதன் காரண காரியங்களை விளக்கி, சான்றுகளைத் தொகுத்துச் சொல்லி ஒரு புதிய பார்வையுடன் முடிக்க வேண்டும் என நம்பினேன். முனைவர் பட்ட ஆய்வின் காலம் வந்தது. எதையும் புதிதாக எழுதும் முன்பு அதைக் குறித்து பிறர் என்ன சொல்லியிருக்கிறார்கள் எனத் தெரிந்து அதைத் தொகுத்...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...

இந்தியாவின் அவலம்

  விஜய் தொடர்ந்து அடுத்தடுத்து ஆளும் பட்சத்தில் அவரை இப்போது ஆதரிக்கும் மார்க்ஸிஸ்டுகள், விசிகவினர் போன்றோரும் எதிர்க்கட்சியான அதிமுகவும் மிக மோசமாக அவரால் வேட்டையாடப்படப் போகிறார்கள். அறவுணர்வோ கருணையோ இல்லாத இயல்பிலேயே கொடுங்கோலரான பாசிஸ்ட்தான் இந்த விஜய். இப்போது அவர் தன் உணர்கொம்புகளை வெளியே விட்டு சோதித்துக் கொண்டிருக்கிறார். முழுரூபத்தை அவர் காட்டும் நாளில் இவர்கள் எல்லாம் அத்துக் கொண்டு ஓடுவது நடக்கும் என்பது என் கணிப்பு. இவரை கொஞ்சமாவது அவர்கள் எதிர்த்தாலோ மறுத்தாலோ மிக மோசமான ஒடுக்குமுறையைச் சந்திப்பார்கள். ஐ.யு.எம்.எல் கூட்டணியில் இருக்கும்போதே சில தவெக நிர்வாகிகள் ஒரு திமுக சார்பு இளைஞரை இஸ்லாமியர் என்று தவறாக நினைத்து ஆண்குறியை அறுப்பேன் என மிரட்டியிருக்கிறார்கள். அவர்கள் துன்புறுத்தியதில் அவருக்கு வலிப்பு வந்து ஆஸ்பத்திரியில் இருக்கிறார். அந்த தவெக நிர்வாகி ஒன்று ஏதோ அறியாப் பிள்ளை அல்லர். அவரது கட்சிக்குள் இருக்கும் மதவெறுப்பையும் இனவாதத்தையும்தான் அவர் வெளிப்படுத்தி இருக்கிறார். விஜய் சட்டமன்றத்தில் பேசும்போது எதிர்க்கட்சி தலைவரை கொளத்தூரில் தோற்கடித்ததை தலையை வெட்டி...

வளர்ச்சியும் அரசின் பொறுப்பின்மையும்

  எனக்கு மைசூர்வாசிகளிடம் ஒரு விசயம் பிடிக்கும் - அவர்கள் இங்கு வரவிருக்கிற சோ கால்ட் வளர்ச்சித் திட்டங்களை மைசூர் ஒரு பாரம்பரிய நகரம், இங்குள்ள மரபான சின்னங்கள் அழிந்துவிடும் எறு சொல்லி நீண்ட காலமாகவே எதிர்க்கிறார்கள். ஆனால் அவர்கள் தடுக்க முடியாதபடி வளர்ச்சி எனும் டினோசர் ஓடி வந்துகொண்டே இருக்கிறது. இங்குள்ள அழகான சாலைகள், மரங்கள் எல்லாம் விரைவில் அழிக்கப்பட்டு ஏகப்பட்ட பாலங்கள் கட்டப்பட்டு இது ஒரு புழுதிப்படலமாக மாறும். குப்பைகள் சாலை ஓரங்களில் குவியும். வருவாய் அதிகமாகும். ஆனால் அதற்குக் கொடுக்கிற கூலி மிகப்பெரியதாக இருக்கும். வளர்ச்சியின் முக்கியமான பிரச்சினை அது முறைப்படுத்தப்பட்டதாக இருக்காது என்பதே - நகரத்திற்குள் எத்தனை வீடுகள் கட்டலாம், விவசாய நிலங்களை விற்கலாமா, நீர்நிலைகளை கட்டிடமாக்க அழிக்கலாமா என்பது குறித்து அரசுக்கு எந்தத் தீர்மானமும் இருக்காது. எதை வேண்டுமானாலும் செய்யுங்கள் என்று திறந்து விட்டுவிடுவார்கள் அப்படியே ஒன்றிரண்டு விதிமுறைகள் இருந்தாலும் கண்டும் காணாமல் விட்டுவிடுவார்கள் (அமைச்சர்களே ரியல் எஸ்டேட் முதலீட்டாளர்களாக, டெண்டர் வாங்குவோராக இருப்பதால்). அடுத்...