Skip to main content

Posts

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

"ஏன் வாசிக்க வேண்டும்?" விமர்சனம் - அன்புக்குமரன் எத்தியரசன்

  புத்தகம்: ஏன் வாசிக்க வேண்டும் எழுதியவர்: எழுத்தாளர்: Abilash Chandran வாங்கிய இடம்: சீரோ டிகிரி அரங்கு, சென்னை புத்தகக் கண்காட்சி வாங்கிய தேதி : 02 மார்ச் 2022 "வாசிப்பது எப்படி?" என்ற புத்தகத்தை அண்மையில் வாசித்தபோது , அதன் தொடர்ச்சியாய் "ஏன் வாசிக்க வேண்டும்?" என்ற புத்தகத்தையும் வாசிக்க நேரிட்டது. நம் வாழ்வாதாரத்தை முன் வைத்து வாசிப்பின் தேவை குறித்து புத்தகத்தின் வாசத்தை நுகராதவர்களுக்கு ஒரு அறிமுக நூலாக இருந்தது செல்வேந்திரன் அவர்களின் கட்டுரை தொகுப்பு. ஆனால் எழுத்தாளர் அபிலாஷ் ஏன் வாசிக்க வேண்டும் என்ற கேள்விக்கான பதிலை மிக விரிவாகவும் நேர்மையாகவும் (வாசிப்பும் ஒரு போதைதான் என்பது போன்ற கருத்துகள் ஊடாக ) தனது கருத்துகளை தனது பிரஞையினால் நமக்கு கடத்தியிருக்கிறார். எழுத்தாளர் அபிலாஷ் அவர்களின் முகப்புத்தக பதிவுகளை சில வருடங்களுக்கு முன்பாக பின்தொடர்ந்தேன். அதன் நீட்சியாக ஒரு நாள் ஹருதயம் என்ற மலையாளதிரைப்படத்தை பற்றிய இவரது கட்டுரையால் கவரப்பட்டேன். அப்படி ஒரு பகுப்பாய்வு. அவரின் அவதானிப்புகள் மிகவும் ஆழ் நிலையில் இருப்பதை உணர்ந்தேன். பின்பு பல கட்டுரைகளை வாச...

கால்கள் நாவல் விமர்சனம் - திருப்பதி மகேஷ்

  I’ve been following R. Abilash Chandran sir’s blogs for years and always wanted to read his debut novel Kaalkal, which won the Yuva Puraskar Sahitya Akademi Award in 2014. I finally got the chance when it was released on Kindle recently. As a visually challenged person, I already understand the world of the visually impaired. But Kaalkal offered me a powerful new perspective — it allowed me to step into the world of people with locomotor disabilities through the beautifully written character of Mathu. Choosing a female protagonist and placing her at the heart of the story added emotional depth and a unique resonance. That intention was clearly felt throughout the novel. Though I found it slightly lengthy, I truly enjoyed the reading experience. I feel deeply satisfied after completing Kaalkal, and I’m excited to read his latest novel, Nilal Bommai.

"கால்கள்" நாவல் விமர்சனம் - கவிப்பூரணி

ஃபேஸ்புக்கில் திரு அபிலாஷ் அவர்களின் பதிவுகளை அவ்வப்போது மட்டுமே பார்த்து வந்த நான், அவரது சிந்தனைகளை பலமுறை ரசித்திருக்கிறேன். அவர் தேர்ந்தெடுக்கும் சிக்கல்கள், அதை ஆராயும் ஆழம், அவரது பார்வையின் தனித்துவம்—இவை அனைத்தும் என்னைக் கவர்ந்தன. அவர் சிந்திக்கும் விதம் எப்போதும் வேறுபட்டதும் தீவிரமானதும். அபிலாஷ் சந்திரன் அவர்களின் “கால்கள்” நாவல் ஏப்ரல் 6ஆம் தேதி கிண்டிலில் வெளியாகியதாகத் தெரிந்துகொண்டேன், அவருடன் தொடர்ந்த தொடர்பில் இருக்கும் நண்பர் மஹேஷ் மூலமாக. மற்ற எதையும் யோசிக்காமல், உடனே அந்த நாவலை டவுன்லோட் செய்து, அன்றிரவு வாசிக்கத் தொடங்கினேன். அதற்கு முந்தைய நாள் நான் "நிழல் பொம்மை" நாவலை வாசிக்கத் தொடங்கியிருந்தேன். ஆனால் "கால்கள்" கிடைத்தவுடன், நீண்ட நாட்களாக காத்திருந்த ஏக்கத்தில், "நிழல் பொம்மை"யை இடைநிறுத்திவிட்டேன். மது — இந்த கதையின் கதாநாயகி, மாற்றுத்திறனாளிகளின் உள்ளத்தை நேரடியாக நெஞ்சோடு இணைக்கும் ஒரு பாத்திரம். அவளது உலகம், சவால்கள், மனவுரைகள், காதலையும் காமத்தையும் பற்றிய எண்ணங்கள் — இவை அனைத்தும் மிக நுட்பமாக எழுதியிருக்கிறார். அவளது பெற்...

"பெரிய மனிதர்"

  "பெரிய மனிதர்" க.நா.சுவின் குறுநாவல். அவரது நாவல்களைப் படிக்கையில் இன்னும் சிறப்பாக எழுதப்பட்டிருக்க வேண்டிய சிறப்பான படைப்புகள் என்று தோன்றும். "பெரிய மனிதரும்" அப்படியான ஒன்றே. ஈவிரக்கம் இல்லாத ஒரு பணக்காரரின் நினைவுக் குறிப்புகள் என்று இதை வர்ணிக்கலாம். 45 வயதை எட்டிய நிலையில் தனக்கு ஒரு நிச்சயமின்மை, எதிலும் கசப்பு தோன்றுவதை அவர் உணர்கிறார். கசப்பு ஒரு பெரும் பந்தாக தன்னை நோக்கி உருண்டு வருவதாக அவருக்குத் தோன்றுகிரது. அவரிடம் மலைமலையாகப் பணம் உள்ளது. அவரது மனைவி, மக்கள் அவருடன் உள்ளனர். அவருக்குப் பல பங்களாக்களும் கார்களும் வேலையாட்களும் உண்டு. ஆனால் உள்ளார்ந்த துக்கம் அவரைச் சூழ்கிறது. அவர் தன் அந்தஸ்து, அடையாளம், வாழ்க்கை என ஒவ்வொன்றாகக் கசந்து சபித்துக் கொண்டும் மறுத்துக் கொண்டும் வருகிறார். அதற்காக அவர் இவற்றையெல்லாம் துறக்கப் போகிறார் என்றில்லை. அவர் தன் பணம், அந்தஸ்து, சாதனைகளைக் குறித்துப் பெருமைப்பட்டுக் கொண்டும் அவற்றைக் காப்பாற்ற வேண்டும் எனத் துடித்துக் கொண்டும் இருக்கிறார். ஒரு கட்டத்தில் அவருக்குத் தன் துன்பத்துக்குக் காரணம் தன் வாழ்வில் அன்பு இல்...

அகச்சித்திரமும் குற்றமின்மையும்

  கேப்ரியல் மேட்ஸ்னெப் ஒரு சர்ச்சைக்குரிய பிரஞ்சு எழுத்தாளர். குழந்தைகளுடன் பாலுறவு கொண்டதற்காக கண்டனத்துக்குள்ளானவர். தன்னுடைய பாலியல் வாழ்க்கையைக் குறித்து அவர் நாவல், அபுனைவு என பல சுவாரஸ்யமான நூல்களை எழுதியுள்ளார். அவை மேற்சொன்ன காரணத்துக்காக தமிழில் கிடைப்பதில்லை. நீங்கள் அவரது எழுத்தை செய்யறிவைக் கொண்டும் மொழியாக்க இயலாது. அங்கும் தடைதான். ஆனால் இந்த இடத்தில்தான் கூகிள் மொழியாக்கச் செயலி ஒரு வரப்பிரசாதமாகிறது. அதில் பி.டி.எப்பைப் பதிவேற்றினால் சில நொடிகள் மொத்தத்ததையும் மொழியாக்கித் தந்து விடுகிறது. இப்படித்தான் மேட்ஸ்னெப்பின் "பதினாறு வயதுக்குக் கீழானவர்கள்" (Les Moins de seize ans) புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தேன். இத்தகையோரின் மனநிலை, சிந்தனைகள், அனுபவங்கள் என்னவெனத் தெரிந்து கொள்ளும் ஆர்வமே என்னைச் செலுத்தியது. அவர் பாலுறவு குறித்தப் பகுதிகளைத் தவிர்த்து விடுகிறார். அவரது மனநிலையிலும் அக-அனுபவங்களிலுமே பக்கங்கள் தொய்கின்றன. இங்கு ஒரு விடயம் என்னை ஆச்சரியப்படுத்தியது - ஒரு குற்றம் அது அகவயப்படும்போது நமக்குக் குற்றமாகத் தெரிவதில்லை. புறவயமாகும்போதே அதன் ஒழுக்கம், அறம...

நவீன கவிதை வாசிப்பு - பயிலரங்குக் குறிப்பு 1

  இன்றைய கவிதை வாசிப்புக்கான இணையவழிப் பயிலரங்கிற்கு வருவோர் அதில் இணையும் முன்பு இதை ஒருமுறைப் படித்து விடவும். அப்போதே உங்களுக்கு கூடுதல் பலன் கிடைக்கும்: நமது இப்போதைய கவிதை வாசிப்பு முறைமை உரையெழுதுவதில் இருந்து தோன்றியிருக்க வேண்டும். தொல்காப்பியம், சங்க இலக்கியத்தை நோக்குங்கால் நாம் இன்னும் ஆழமான, சுதந்திரமான வாசிப்புக்கு பழகியவர்களாக முன்பு இருந்திருந்தாலும் நவீன காலத்துக்கு வந்து நவீன கல்வியைப் பழகும் வேளையில் நாம் மனனம் செய்வதை பிரதானப்படுத்தத் தொடங்கி இருந்தோம். செய்யுள்களை மனனம் செய்வது, உரையாசிரியர்களின் விளக்கங்களை அப்படியே ஏற்றுக் கொள்வது என. பல்வேறு பின்னணிகளின் பொருளில் விதவிதமாக அர்த்தப்படுத்தும் சுதந்திரத்தைக் கூட இத்தகைய வாசிப்பு நமக்கு வழங்கவில்லை. கல்விப் புலத்துக்கு வெளியில் இதழ்களிலும் இலக்கியக் கூட்டங்களிலும் நாம் ரசனை சார்ந்த ஒரு வாசிப்பு முறைமையைப் பழகிக் கொண்டோம். இது வெகுஜன ஊடகத்துக்கும் ஏற்புடையதாக இருந்தது. இதன் நோக்கம் ஒரு படைப்பை அதன் உணர்வு சார்ந்த, மிகையான பகுதிகளை மட்டுமே பிரதானப்படுத்தி வாசிப்பது, வாசிப்பின் முடிவில் மானுடவாத விழுமியங்களான மனிதனி...

கவிதை வாசிப்புப் பயிலரங்கு - அமர்வு 1

  விருப்பமுள்ளோர் வருக! தொடுவழியைக் கிளிக் செய்து நுழைக. சனிக்கிழமை, 21 மார்ச் · 6:00 – 7:00pm Time zone: Asia/Kolkata Google Meet joining info Video call link: https://meet.google.com/iff-eqhg-ghp