முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நீயா நானாவும் நாமும் ஒருசேர மாறிய கதை

  நேற்றைய நீயா நானாவைப் பார்த்துக் கொண்டிருக்கையில் ஒன்று தோன்றியது: நீயா நானா ஆரம்பிக்கப்பட்டு முதல் பத்தாண்டுகளுக்கு மேல் சமூகத்தில் நடக்கும் மாற்றங்களை, அவற்றின் வினோதங்களை, சமூகவியல் தலைப்புகளை, மனித நடத்தையின் புதிர்களை, புதிது புதிதாக நடக்கும் அபத்தங்களை விவாதிக்கக் கூடியதாக இருந்தது. அதாவது ஒரு சமூகப் சுயபரிசீலனைக் காலகட்டம் அது. பரவலாக பலரும் பார்த்து அதைக் குறித்து விவாதித்தார்கள், சமூகத்தின் நாடியைப் பிடித்துச் சொல்லும் அதன் பண்பை வியந்தோதினார்கள். அடுத்து 8-9 ஆண்டுகளாக நீயா நானா சமூகத்தை ஒரு பழங்காலத்துக்கு எடுத்துச் சென்று உறைய வைத்து அதன் பெருமைகளைப் பேசத் தொடங்கியது. அதாவது ஒரேயடியாக மாறிவிட்டது என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் மெல்ல மெல்ல அது ஒரு பழம்பெருமை நிகழ்ச்சியாக மாறியது. கூடவே நிகழ்ச்சியை ஆண்களை விட அதிகம் பெண்களே இப்போது பார்ப்பதால் ஏதோ பெமினா பத்திரிகையைப் போல மாறிவிட்டது. அதில் ஒரு woke தன்மையும் அதிகரித்துவிட்டது. சமூகப் பிரச்சினைகளில் அது நாம் தமிழர் கட்சி, திமுகவுக்குள் சுருங்கியது என்றால் பாலினத்தில் பெண்களிடத்து சுருங்கியது. (நான் இங்கு நாதக, திமுக என...

ஊழல் ஒழிப்பில் உள்ள அபத்தம்

  முபியில் ஒரு கொரியன் படம் பார்த்தேன். No Other Choice ("வேறு வழியே இல்லை"). அதை நான் கண்ட சிறந்த அரசியல் படங்களின் பட்டியலில் வைப்பேன். அது நேரடி கட்சி அரசியல் பற்றின படம் அல்ல. நடைமுறை உலகில் உள்ள நவமுதலீட்டிய அரசியல்தான் அதன் மையம். தனியார் காகிதத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் நல்ல பொறுப்பில் இருந்த நாயகனுக்கு நிறுவன நிர்வாகம் அமெரிக்கர்கள் வசம் போனதும் செலவு குறைப்பு நடவடிக்கையின் பகுதியாக வேலை போகிறது. அடுத்து நல்ல வேலை எவ்வளவு முயன்றும் கிடைக்கவில்லை. அவருக்கு (இப்படி பாதிக்கப்படுகிற பலரையும் போல) உண்மை புரியவில்லை - வேலையைப் பறித்தது நிர்வாகம் மட்டுமே அல்ல, புது வேலை கிடைக்காததற்குக் காரணம் தன் போட்டியாளர்கள் மட்டும் அல்லர். நிரந்தரமின்மை என்பது இந்த பொருளாதார அமைப்புக்குள் திட்டமிட்டே உருவாக்கப்பட்டு அதன் வழியாக பெருமுதலாளிகளுக்குச் சாதகமான அதிக லாபமீடும் நடைமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. சி.இ.ஓ போன்ற பெரும்பொறுப்பில் இருப்போரே அங்கு மிக அதிகமாக ஈட்டுவதாலும் நிறுவனங்கள் தொடர்ந்து உடைக்கப்பட்டு லாபமும் முதலீடும் பல இடங்களில் மீளமீள செலுத்தப்படுவதாலும் யாரிடமும் பணம் இல்லாத...

ஆண்களின் பிரச்சினை

  இணையத் தாக்குதல்கள் இன்று தற்செயலாக ஒருவர் மீது நிகழ்த்தப்படுவதாக நான் நம்பவில்லை . அக்காலம் மலையேறி விட்டது . இன்று இதையே தொழிலாகக் கொண்டோர் நிறைய பேர் இருக்கிறார்கள் . வாடகைக்குத்தான் . இவர்களை ஒருங்கிணைக்கும் ரூட்ஸ் மீடியா போன்ற சில நிறுவனங்களே உள்ளன . பணம் கொடுத்தால் இணைய வெறிநாய்களை அவிழ்த்து விடுவார்கள் .  கெனிஷா - ரவி மோகன் விவகாரக்த்திலும் இத்தகைய நிறுவனம் எதுவோ பின்னணியில் இருக்கும் என்பதே என் கணிப்பு . இது நமக்குத் தெரியும்போது அவர்களுக்குத் தெரியாதா ? அவர்களுடைய உணர்ச்சிக் குமுறல் நேர்காணல் , காணொளிகளைக் கண்டபோது விசயம் வேறெதுவோ என்று தோன்றியது . அதில் வெளிநபர்களுக்குக் கருத்து சொல்ல ஒன்றுமே இல்லை . நம்மைப் போன்றோருக்கு விர்ச்சுவல் உலக்கு வெளியே மிகப்பெரிய உலகம் உள்ளது . தினசரி வேலை , வீட்டுப் பிரச்சினைகள் , தனிப்பற்ற பயிற்சிகள் . நம் பிரக்ஞைக்குள் இணையம் ஒரு மிகச்சிறிய இடத்தையே பிடிக்க முடியும் . ஆனால் நம்மில் சமூகவலைதளத்தை ரொம்ப சீரியஸாக எடுத்துக் கொள்வோரும் உண்டு . இன்று பல பிரப...