நேற்றைய நீயா நானாவைப் பார்த்துக் கொண்டிருக்கையில் ஒன்று தோன்றியது: நீயா நானா ஆரம்பிக்கப்பட்டு முதல் பத்தாண்டுகளுக்கு மேல் சமூகத்தில் நடக்கும் மாற்றங்களை, அவற்றின் வினோதங்களை, சமூகவியல் தலைப்புகளை, மனித நடத்தையின் புதிர்களை, புதிது புதிதாக நடக்கும் அபத்தங்களை விவாதிக்கக் கூடியதாக இருந்தது. அதாவது ஒரு சமூகப் சுயபரிசீலனைக் காலகட்டம் அது. பரவலாக பலரும் பார்த்து அதைக் குறித்து விவாதித்தார்கள், சமூகத்தின் நாடியைப் பிடித்துச் சொல்லும் அதன் பண்பை வியந்தோதினார்கள். அடுத்து 8-9 ஆண்டுகளாக நீயா நானா சமூகத்தை ஒரு பழங்காலத்துக்கு எடுத்துச் சென்று உறைய வைத்து அதன் பெருமைகளைப் பேசத் தொடங்கியது. அதாவது ஒரேயடியாக மாறிவிட்டது என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் மெல்ல மெல்ல அது ஒரு பழம்பெருமை நிகழ்ச்சியாக மாறியது. கூடவே நிகழ்ச்சியை ஆண்களை விட அதிகம் பெண்களே இப்போது பார்ப்பதால் ஏதோ பெமினா பத்திரிகையைப் போல மாறிவிட்டது. அதில் ஒரு woke தன்மையும் அதிகரித்துவிட்டது. சமூகப் பிரச்சினைகளில் அது நாம் தமிழர் கட்சி, திமுகவுக்குள் சுருங்கியது என்றால் பாலினத்தில் பெண்களிடத்து சுருங்கியது. (நான் இங்கு நாதக, திமுக என...